Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (13:49 IST)
சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  கனமழையிலிருந்தும், புயலிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் நேற்றிரவு முதல் மிககனமழை பெய்து வந்த நிலையில், சில இடங்களில் மழை சற்று குறைந்துள்ள போதிலும் காற்றடித்து வருகிறது. 

மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை சூழ்ந்துள்ள சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்களை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (டிசம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை ) பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments