Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு: கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:52 IST)
வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வங்க கடலில் உருவாகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் முழுவதிலும் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments