Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (14:25 IST)
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் கனமழை மற்றும் அதிகனமழை குறித்து எச்சரிக்கை வரும் நிலையில் தற்போது கோடையில் அதுவும் அக்னி நட்சத்திர நேரத்தில் அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் வரை தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது . மேலும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments