மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (16:36 IST)
வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மீண்டும் கனமழை குறித்து அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி தஞ்சை உள்பட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம், இரவு வேளையில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனிமூட்டம் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments