Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் 28 நாட்களில் தடுப்பூசி! – சுகாதாரத்துறை ஏற்பாடு!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (13:01 IST)
தமிழகத்திலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் இரண்டாவது தடுப்பூசி போட பொது சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திய பின் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான காலம் 4 வாரத்திலிருந்து 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்பதால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த பல காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வெளிநாடு செல்பவர்கள் மட்டும் 28 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்னையில் 19 இடங்களிலும் தமிழகம் முழுவதும் 75 இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே 28 நாட்களில் தடுப்பூசி என்றும் மற்றவர்கள் 12 வாரங்கள் கழித்தே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என்றும் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. 4 கட்டங்களாக யாத்திரை நடத்தி கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments