Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான குற்றவாளி எங்கே?? நீதிமன்றம் கேள்வி

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (13:35 IST)
சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான குற்றவாளி ஜெயகோபால் எங்கே? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையில் மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அதிமுக பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னே வந்த லாரி, அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கிய நிலையில் இதற்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவந்தனர். இந்நிலையில் பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை அவரை போலீஸார் கைது செய்யவில்லை எனவும், இது குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் வாதாடினர்.

இதனைத் தொடர்ந்து, பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணாமாக இருந்த ஜெயகோபால் எங்கே?? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments