Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் பிரசாதம், அர்ச்சனை வேண்டாம்! – அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:23 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோவில்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவில்களுக்கு வரும் பக்தர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கோவில் வளாகங்களில் சானிட்டைசர், கிருமி நாசினி கை கழுவ வைக்கவேண்டும்

கோவில்களுக்கு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தலாம்.

கோவில்களில் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு அர்ச்சனை செய்வது, மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம், துளசி நீர் தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டுகோள்.

இதுதவிர திருவிழா நடந்து வரும் கோவில்களில் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை, சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து பாதுகாப்பான முறையில் திருவிழாவை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments