Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் உயிருக்கு ஆபத்தா? மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (22:08 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



 


சமீபத்தில் தேனி அருகே ஓபிஎச் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் பாதுகாப்பு வழங்குமாறு ஓபிஎஸ் அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை அடுத்து ஓபிஎஸ் அவர்களுக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்த மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments