Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று வரை சென்னையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் கே.என்.நேரு

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (21:50 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திலும் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளிலும் ஒருசில தனியார் மருத்துவமனையிலும் தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று வரை எத்தனை பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
கடந்த 27ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் மொத்தம் 25,25,905 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 20,109 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க தேவையான முன்னெடுப்புகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments