Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாலிக்காக செய்தது விபரீதத்தில் முடிந்தது: விசாரணையின்போது கதறியழுத ராஜகோபாலன்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (14:23 IST)
ஜாலிக்காக மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விபரீதமாக முடிந்து விட்டது என போலீஸ் விசாரணையின்போது ஆசிரியர் ராஜகோபாலன் கதறியழுததாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணையின்போது ஜாலியாகத்தான் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாகவும் அது இந்த அளவுக்கு விபரீதத்தில் முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாக்கு மூலத்தின் போது ராஜகோபாலன் கதறி அழுததாக கூறப்படுகிறது 
 
நேற்று மாலை கைது செய்யப்பட்ட ராஜகோபாலனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை செய்ததாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜகோபால் மீது மாணவிகள் பலமுறை புகார் செய்தும் பள்ளி நிர்வாகம் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளதாக இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில ஆசிரியர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்