Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன். ப.சிதம்பரம்

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (10:10 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி, தேசிய தலைவர்களும் இதுகுறித்து பேச ஆரம்பித்துவிட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மெர்சல் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ப.சிதம்பரம் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.



 
 
நேற்று தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் மெர்சல் குறித்து கூறியபோது, ','அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்' என கிண்டலாக கூறியிருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
 
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ப..சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அந்த படத்திற்கு பணம் கொடுத்தவர்கள் தான். அந்த வகையில் மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments