Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே நாளில் 7 பெண்கள் மாயம்

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (10:33 IST)
சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் பிரச்சனைகளுக்கு குறைவின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, அடுத்தடுத்து அரசியலில் குதிக்கும் நடிகர்களின் பிரச்சனை, ஆளுங்க்கட்சி பிரச்சனை, எதிர்கட்சிப் பிரச்சனை என பிரச்சனைகளுக்கு பஞ்சமின்றி உள்ளது. மேலும் தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தலைதூக்கி நிற்கின்றது.
 
இந்நிலையில் மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த விநோதினி, சிட்லபாக்கத்தை சேர்ந்த நீலாதேவி (25), திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) வெள்ளக்காடு சிவரஞ்சனி (16), புல்லரம்பாக்கம் கலைவாணி (20), ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வர்ஷா (20) ஆகியோர் வெளியே சென்று வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீஸார் காணாமல் போன பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நாளில் ஏழு பெண்கள் காணாமல் போயிருப்பது சென்னைவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments