Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (10:30 IST)
கரூரில் ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூரில் உள்ள ராயனூர் என்ற பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் கட்ட சோதனை நடந்தது. அதனை அடுத்து ஜூன் 23ஆம் தேதி இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. 
 
தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments