Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரெய்ட்: பிடியில் சிக்கும் ஸ்பெக்டரம் மால் மற்றும் சத்யம் சினிமாஸ்??

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:15 IST)
சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து ஸ்பெக்டரம் மால் மற்றும் சத்யம் சினிமாஸில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சத்யம் சினிமாஸ் குழுமத்தினரிடம் இருந்த ஜாஸ் சினிமாஸ், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சசிகலா குடும்பம் ரூ.1000 கோடிக்கு மிரட்டி வாங்கியது என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. 
 
இந்நிலையில், சத்யம் சினிமாஸ் திரையரங்க உரிமையாளர் வீடு உள்ளிட்ட 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.  ஆனால், சத்யம் திரையரங்களில் எந்த சோதனையும் நடைபெறவில்லை என சத்யம் சினிமாஸ் மக்கள் தொடர்பாளர் சங்கீதா கந்தவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சத்யம் சினிமாஸ் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் சிட்டிபாபு, செந்தில் வீடுகள், பட்டேல் குரூப், மிலன், கட்டுமான நிறுவனமான மார்க் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவது உறுதியாகியுள்ளது. 
 
33 இடங்கலில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கும் இன்றைய சோதனைக்கும் தொடர்பு இல்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments