Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

Siva
திங்கள், 12 மே 2025 (09:24 IST)
கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதற்கான புகாரின் பின்னணியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
 
2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், கரூரில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் பற்றிய விவரங்கள் வெளியாகின. நில உரிமையாளர்கள், தங்களிடம் இருந்து அந்த நிலத்தை வலுக்கட்டாயமாக பெற்றதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது புகார் அளித்தனர்.
 
இந்த வழக்கு முதலில் கரூர் போலீசில் பதிவு செய்யப்பட்டாலும், பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஜாமின் பெற முடியாத நிலை காரணமாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவில் சிபிசிஐடி கைது செய்தது. பின்னர், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டார்.
 
தற்போது, பினாமி சொத்து தொடர்பாக வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. நிலம் உண்மையில் யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மே 23-ஆம் தேதி, வழக்கறிஞர் அல்லது பதிலளிக்கக்கூடிய நபர் மூலம் காணொலி வழியாக விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் நில உரிமையாளர்கள் பிரகாஷ், ஷோபனாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம்?

எல்லா போன்லயும் நான்தான் இருக்கணும்! கூகிள் செய்த வேலை! - அபராதம் விதித்த ஆஸ்திரேலியா!

த்ரிஷ்யம் பட பாணியில் ஒரு கொலை.. மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது..!

மக்கள் குறையை கேட்டு கொண்டிருந்த டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி..!

பத்தே நாட்களில் 1500 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments