Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (10:09 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற வாய்ப்பு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மழை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: அதிஷி தேர்வுக்கு ஆம் ஆத்மி பெண் எம்பி எதிர்ப்பு..!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments