Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செலவை மிச்சப்படுத்தும் “வொர்க் ஃப்ரம் ஹோம்” – நிரந்தரமாக்க முயலும் நிறுவனங்கள்!

Webdunia
வியாழன், 14 மே 2020 (13:43 IST)
கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் ஐ.டி ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியும் நிலையில் பல நிறுவனங்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவதை நிரந்தரமாக்க திட்டமிட்டு வருகின்றன.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளது பல ஐடி நிறுவனங்கள். இதனால் ஊழியர்களின் பணி திறன் அதிகரித்துள்ளதாக பல ஐடி நிறுவனங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொழிலாளர் சட்டத்தின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கோரிக்கைகள் வைத்துள்ளன.

இந்நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து தொழிலாளர் சட்டத்தில் என்ன மாற்றங்க செய்ய வேண்டும் என்பது குறித்து நாஸ்காம் அமைப்பு மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளது. அந்த கோரிக்கைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2025க்குள் தனது ஊழியர்களில் 75 சதவீதத்தினரை வொர்க் ஃப்ரம் ஹோமில் பணிபுரிய அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனமும் 25 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிய அனுமதிக்க இருப்பதாக கூறியுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கும் ஐடி நிறுவனங்களில் சில நூறு பேர் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும், இதனால் ஐடி நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறையும் என்பதாலும் பல நிறுவனங்கள் இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments