Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக்கர் கடையில் வருமான வரித்துறை, பறக்கும் படை அதிரடி சோதனை: தினகரனுக்கு ஆப்பு?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (16:26 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் குக்கர் சின்னம் தொகுதி முழுவதும் பிரபலமாகிவிட்டது.
 
எங்கு பார்த்தாலும் பெண்கள் குக்கருடன் வலம் வரும் காட்சியை பார்க்க முடிகிறது. இதனையடுத்து அருகில் உள்ள குக்கர் கடைகளில் தினகரன் தரப்பு டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கி வருவதாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணைய பறக்கும் படையும் சேர்ந்து ஆர்கே நகருக்கு வெளியே உள்ள ராயப்பேட்டையில் உள்ள குக்கர் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து டோக்கனோ அல்லது தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு குக்கரோ வழங்கியதாக ஆதாரம் கிடைத்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவது கடினம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments