Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளாளுக்கு கருத்து சொன்னா பதில் சொல்ல முடியாது! – ஜெயக்குமார் கறார்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (11:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா என பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் “கூட்டணி என்பது தேர்தல் நெருங்க நெருங்க மாற கூடியது என்றும், சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனும் கூட கூட்டணி வைக்க நேரலாம்” என்றும் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து குறித்து நிருபர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது “கூட்டணி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை கூறி வருகிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது அவர் தனிப்பட்ட கருத்து. இப்படியாக ஒவ்வொருவரும் சொல்லும் கருத்துகளுக்கு பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments