ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

Mahendran
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (12:27 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "ஓபிஎஸ் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, கொசுவை பற்றி பேசுவதற்கு நேரமில்லை" என்று கூறினார்.

"ரகசியம் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓபிஎஸ் இதைத்தான் செய்கிறார். இதெல்லாம் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது" என்று விமர்சித்தார்.

மேலும், மும்மொழி கொள்கை பற்றி பேசிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியின் இருமொழி கொள்கையை பின்பற்றுகிறோம்" என்று தெரிவித்தார்.

மொழி என்பது தனிப்பட்ட விஷயம். ஹிந்தி படிக்க வேண்டும் என்றால், நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் திணிக்க வேண்டாம் என்று கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், தமிழ் தாய் மொழியாகவும் உள்ளது. தமிழ் மொழி அழியாமல் இருக்க இங்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments