Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ், தினகரன், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் கட்சியில் சேர்க்க மாட்டோம்: ஜெயக்குமார்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (14:14 IST)
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் இது குறித்து இன்று விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவருக்கும் இந்த மன்னிப்பு கடிதம் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். 
 
மேற்கண்ட மூவரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்றும் மூவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் துளி கூட அதிமுகவுக்கு கிடையாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
எனவே ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments