Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

Prasanth Karthick
செவ்வாய், 25 மார்ச் 2025 (12:16 IST)

சென்னையில் காலை ஒரு மணி நேரத்திற்குள் பல இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீஸார் பிடித்துள்ளனர்.

 

சென்னையின் திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி என பல பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர் நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 8க்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தமாக 15 சவரனுக்கும் மேல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 

இதுதொடர்பாக அனைத்து பகுதி போலீஸாரும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் விமான நிலையம் நோக்கி சென்றதை கண்டுபிடித்துள்ளனர். விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு அவர்கள் தயாராக இருந்தபோது 2 கொள்ளையர்களையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

 

இந்த கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தனர்? கொள்ளையை திட்டமிட்டது எப்படி? என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments