Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஒருவேளை நான் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும்”…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (10:33 IST)
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்று வெளியேறிய நிலையில், தான் நேற்றைய போட்டியில் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் மோதியதில் கடும் தோல்வியடைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது.

இதனை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியடைந்தது போல், இந்தியா அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றும், ஒரு வேளை நேற்றைய போட்டியில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர், எதிர்காலத்தில் அதிமுக வெற்றி பெறும்போது, இந்திய அணியும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments