Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு போட்டு கொலை முயற்சி; கடம்பூரார் புகார்! – அமமுகவினர் மீது வழக்கு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:59 IST)
அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு கொளுத்திய விவகாரத்தில் அமமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் நிலையில், அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ காரில் சென்றபோது கார் அருகே அமமுகவினர் பட்டாசு கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுகவினர் திட்டமிட்டு தன் காரை வழிமறித்து பட்டாசை கொளுத்தி போட்டதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அமமுகவினர் மீது புகாரளித்துள்ளார்.

அமைச்சரின் புகாரின் அடிப்படையில் அமமுகவினர் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments