Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியலின பெண்ணுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு! – தேர்தலை புறக்கணித்த மக்கள்??

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:51 IST)
பட்டியலின பெண்ணுக்கு ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்து காட்பாடி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டி கிராம மக்கள் மொத்தமாக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே உள்ள பகுதிக்கு , தலைவர் பதவியை ஒதுக்கியதாக இப்பகுதி மக்கள் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் கூட வாக்களிக்கவில்லை என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

அடுத்த கட்டுரையில்
Show comments