Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூட நம்பிக்கைகளை ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (19:49 IST)
கமல்ஹாசன் தன்னை அடிக்கடி பொது மேடைகளில் பகுத்தறிவாதி என்று கூறிக்கொள்வார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தில் தனது மகள் உள்பட பலர் பகுத்தறிவாளராக இல்லை என்றும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் தான் தலையிடுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் கமல் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'தான் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று கூற தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு தான் வந்திருப்பது ஏழ்மையையும் ஊழலையும் ஒழிக்கவே தவிர மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பகுத்தறிவாளர் என்று நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் உங்களை ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் என்று உங்கள் ரசிகர்களும் தொண்டர்களும் கூறுகின்றார்களே, இது சர்ச்சை இல்லையா? என்ற கேள்விக்கு நிச்சயம் சர்ச்சைதான், என்னுடைய தொண்டர்களை திருத்தி கொள்ள அறிவுரை கூறுவேன் என்று கூறினார்.
 
மேலும் லோக்பால் குறித்து கமல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் லோக்பாலில் பாலே இல்லை வெறும் தண்ணீர்தான் உள்ளது என்று கேலியாக குறிப்பிட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments