Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு என்னை திட்டவோ, அணைக்கவோ உரிமை இருக்கு! – கமல்ஹாசன் குறித்து குஷ்பூ!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (08:14 IST)
வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்பூ தெரிவித்த கருத்துகளை கமல்ஹாசன் விமர்சித்த நிலையில் அதற்கு அவருக்கு உரிமை உள்ளதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பூ தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார். இவரை சேப்பாக்கம் மற்றும் திருவெல்லிக்கேணி தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளராக நியமித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் குஷ்பூ வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “குஷ்பூவுக்கு வேளாண் சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது” என கூறியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள குஷ்பூ “கமல் எனக்கு நெடுநாளைய நண்பர். என்னை திட்டவோ, அணைக்கவோ அவருக்கு எப்போதும் உரிமை உண்டு. “அரசியல் நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ இல்லை” என்ற கலைஞரின் வாக்குபடி நடப்பவள் நான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments