Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கமல் டுவிட்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதை அடுத்து இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் காட்டமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இதையெல்லாம் சரி செய்யாமல் மத்திய அரசும் பிரதமர் மோடி, அமித்ஷாவும் மேற்குவங்க தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று காலை சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் ஆக்சிஜன் சிலிண்டரை எப்படியாவது ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அலட்சியக் கிருமித் தாக்குதலாலும்  இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால்,  தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments