Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபோர்டு ஊழியர்களில் நிலைக்கு என்ன பதில்? கமல் முதல்வருக்கு வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:23 IST)
ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என கமல் கோரிக்கை. 

 
சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில்  மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் இது குறித்து முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஃபோர்டு நிர்வாகத்தின் திடீர் முடிவால் நேரடி, மறைமுக ஊழியர்கள், குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments