Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடி அரசியல் களத்தில் கமல்: எண்ணூர் துறைமுகத்தில் மக்களோடு கலந்துரையாடல்!!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (09:52 IST)
நடிகர் கமல் அரசியலில் களமிறங்கபோவதாக கூறிவரும் நிலையில், இன்று காலை எண்ணூர் துறைமுக பகுதிகளை பார்வையிட்டார்.


 
 
மக்கள் பிரச்சினைகளுக்காக டுவிட்டரில் அரசை எதிர்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார் கமல். பல அரசியல் தலைவர்கள் டிவிட்டர் பேசுவது அரசியல் அல்ல என்றும் விமர்சனம் செய்தனர். 
 
இந்நிலையில், நேற்று தனது டுவிட்டர் பதிவில் வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு கூறியிருந்தார்.
 
அதில் எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், இன்று நேரடியாக எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.


 

 
அதோடு அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசியுள்ளார். மேலும், அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார்.
 
டிவிட்டரில் மட்டுமே காட்டமான கருத்துகளை முன்வைத்து வந்த கமல் யாரும் எதிர்பாராத விதமாக நேரடியாக களத்தில் இறங்கியது அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments