Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும், எம்ஜிஆரும் ஒரே இனத்தவர்கள்! – புது ரூட்டில் கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (12:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை சென்றுள்ள கமல்ஹாசன் தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நேற்று மதுரை சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அங்கு மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று மதுரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு பேசிய அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும். எம்.ஜி.ஆரும் நானும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சினிமாக்காரர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்கள். மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். மக்கள் நீதி மய்யம் அதை செய்யும். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி.தொகுதி குறித்து பின்னால் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments