Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் வீட்டில் கனிமொழி, ராஜாத்தி அம்மாள்..! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!!

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:42 IST)
திமுக எம்பி கனிமொழி, திருமதி ராஜாத்தி அம்மாள் ஆகியோர் மறைந்த விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில், அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ALSO READ: தமிழகம் முழுவதும் போராட்டம்..! ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!
 
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது தாயார் திருமதி.ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்திய அவர்கள்,  திருமதி.பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதலும்  தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments