Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்.. பெண் ஐடி ஊழியர் உட்பட இருவர் கைது..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:12 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கஞ்சா உட்பட போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த விடுதி அறையில் சோதனை செய்தனர்

அப்போது அங்கு இருந்த 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் ஒருவரும் கால் டாக்ஸி டிரைவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கஞ்சா விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments