Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் கருப்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சி தமிழகத்தில் போட்டி.. சீமான் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (08:30 IST)
நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி என்ற சின்னத்தை தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு வழங்கி விட்டது என்பது தெரிந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீமான் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்றத்திலும் சீமானுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து சீமான் வேறு சின்னத்தை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடகா மாநிலத்தின் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிப்போம் என்று இந்த கட்சியின் தமிழகத்தின் பொறுப்பாளர் அனு பாஸ்கர் என்பவர் தெரிவித்துள்ளார் 
 
நாம் தமிழர் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களே மாறி ஓட்டுப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சீமான் கடும் அதிர்ச்சியில்  இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments