Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு 3ஆயிரம் கன அடி தண்ணீர்.. உறுதி செய்த ஆணையம்.. மறுபரிசீலனைக்கு கர்நாடகா கோரிக்கை..

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:35 IST)
காவிரியில் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த உத்தரவை  மறு பரிசீலனை  செய்ய கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா முறையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு அளித்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து  விவாதிக்கவும்,  தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு  கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் பேட்டி அளித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments