Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறது கோயம்பேடு சந்தை: பிரதமர் உரையை தொடர்ந்து முடிவு!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (08:38 IST)
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுகிழமை கோயம்பேடு சந்தையை மூட முடிவெடுத்துள்ளனர் வியபாரிகள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள கொரோனா பரவலை மூன்றாம் நிலைக்கு முன்னேறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக நேரடியாக பேசிய பிரதமர் மோடி வருகின்ற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றான சுய தனிமைப்படுத்திக் கொள்ளலை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படாது என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேஸ் குடுக்க வந்திருக்கேன்..! போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த சிறுத்தை! - வைரலாகும் நீலகிரி சிசிடிவி வீடியோ!

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

டீசல் செலவு அதிகரிப்பு எதிரொலி: 1000 பேருந்துகள் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றம்..!

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

மேலே பாம்பு.. கீழே நரி..! மத்திய அரசு, ஆளுநரை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments