Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன்.. தற்கொலைக்கு முயன்றாரா?

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (14:54 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தலைமறைவான நிலையில் அவர் கோவையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை போலீசார்கைது செய்தனர்.
 
இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் என்றும், தலைமறைவாக இருந்த போதே தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சோதனையில் தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது என்றும், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்