Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன்.. தற்கொலைக்கு முயன்றாரா?

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (14:54 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் தலைமறைவான நிலையில் அவர் கோவையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை போலீசார்கைது செய்தனர்.
 
இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சிவராமன் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் என்றும், தலைமறைவாக இருந்த போதே தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ சோதனையில் தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது என்றும், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்