Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (15:27 IST)
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை
கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதும் இந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்த அன்று பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்த நினைவு நாளை பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் 
 
அதுமட்டுமின்றி பள்ளி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சியை தொடங்கியுள்ளதை அடுத்து இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments