Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி எப்ப வேணாலும் அருவியில் குளிக்கலாம்! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:33 IST)
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இனி 24 மணி நேரமும் குளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தது. இதனால் குற்றாலம் அருவி கடந்த சில மாதங்கள் முன்னதாக சுற்றுலா பயணிகளுக்காக கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலம் காரணமாக அருவிகளுக்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று முதலாக 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments