Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு? நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்....

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:48 IST)
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரி உடைந்து நீர் வெளியேற துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.




 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
 
இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரி உடைந்து நீர் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாற்றிலும் கனமழை காரணமாக நீரின் மட்டம் அதிகரித்து வருவதால் அடையாற்றின் கரையோர மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments