Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி இறுதி அஞ்சலி - கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த முக்கிய தலைவர்கள்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (10:55 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலியின் போது ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது பொதுமக்கள் விஐபி வரிசையில் அத்துமீறி நுழைந்ததால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இதனிடையே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கினார். பின் ராகுலை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்து சென்றனர். 
அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், அகிலேஷ் யாதவ், லாலு மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments