Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு மது கிடையாதா..? அண்டை மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மதுப் பிரியர்கள்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (11:25 IST)
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளால் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடு உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு மது வாங்க செல்வது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத 11 மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது வாங்க அண்டை மாவட்டங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. மதுக்கடை தடை அமலில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் புதுக்கோட்டை – தஞ்சாவூர் எல்லையான கைகாட்டியில் உள்ள மதுபானக்கடைகளில் குவிந்துள்ளனர்.

அதேபோல பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் மதுவாங்க வேறு மாவட்டங்களுக்கு விரைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments