Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை போல மதுரை, திருவண்ணாமலை, வேலூர்: அதிரடி காட்டுமா அரசு?

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (17:22 IST)
மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. எனவே இது குறித்து முடிவெடுக்க சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார் முதல்வர்.  
 
மருத்துவ குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும் மாறாக கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொதுமுடக்கத்தை தீவிரமாக்கலாம் என யோசனை கூறியுள்ளதாக தெரிகிறது.   
 
எனவே, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு என தற்போதைய தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து தற்போது மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதன்படி சென்னையை போல மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு என கூறப்படுகிறது. 
 
விரைவில் ஊரடங்கு குறித்து தமிழக அரசு சார்பில் அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments