Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எதிர்பார்த்ததை விட கனமழையா?

Mahendran
செவ்வாய், 12 நவம்பர் 2024 (14:57 IST)
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்யும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தென்மேற்கு வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மட்டும் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
இதனால் சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். 
 
நவம்பர் 17 கன மழை எச்சரிக்கையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தில் கன மழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள துறைகளையும் தயார் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments