Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

Siva
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (14:54 IST)
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், சில நாட்களாக வெப்பநிலை குறைந்து  வருவதைப் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
மேலும், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வெப்பநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments