Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தீப்பிடித்த சொகுசு பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்!

Bus Fire
Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:26 IST)
தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூர் சென்ற சொகுசு பேருந்து ஒன்று நடுவழியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறங்க சொல்லியுள்ளார். இதனால் பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து அணைத்துள்ளனர். ஆனால் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments