Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Advertiesment
அ.தி.மு.க.

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (12:51 IST)
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்ற அ.தி.மு.க. உறுப்பினர், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறி, இந்த தேர்வை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 4வது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, சூரியமூர்த்தி அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்றும், அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் தேர்வு அதிகாரபூர்வமாக செல்லும் என உத்தரவிட்டது.
 
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஏற்கெனவே தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது இது மூன்றாவது வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?