Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் போராடிய மாணவர்கள்.. மசோதா எதிர்ப்பில் தீவிரம்

Arun Prasath
புதன், 18 டிசம்பர் 2019 (10:13 IST)
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று இரவு முழுவது போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

பின்பு இரவில் பல்கலைகழகத்திற்குள் புகுந்த போலீஸார் மாணவர்களை தாக்கினர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து டிசம்பர் 23 வரை பல்கலைகழகம் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments