Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளர் விழாவா? கள்ளழகர் விழாவா? மீண்டும் உளறிய மு.க.ஸ்டாலின்

முக ஸ்டாலின்
Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (19:43 IST)
ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அன்றைய தினம் மதுரையில் சித்திரை பெருவிழா கொண்டாடப்படுவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று மதுரை நகர மக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
 
அரசுக்கு எதிரான எந்தவொரு கோரிக்கை என்றாலும் அதில் வலிய வந்து கலந்து கொள்ளும் திமுக, இந்த கோரிக்கையை தங்கள் கட்சியும் முன்வைப்பதாக தெரிவித்தது. மேலும் இதுகுறித்து முக ஸ்டாலின் பேட்டி அளித்தபோது மதுரையில் நடைபெறும் இந்த கள்ளர் விழாவை பற்றி ஏன் தேர்தல் ஆணையம் நினைக்கவில்லை என்பதுதான் எங்களது சந்தேகமாக உள்ளது என்று கூறியுள்ளார். 
 
சித்திரை பெருவிழாவில் ஒரு அங்கமான கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா பற்றி கேள்விப்பட்டுள்ளோம். இதனை கள்ளழகர் விழா என்றும் கூறுவதுண்டு. ஆனால் கள்ளர் விழா என்றால் என்ன? என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். வழக்கம்போல் முக ஸ்டாலின் உளறியதாகவும் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments