Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா! – மதுரையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:31 IST)
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் 9 முதல் 12 வகுப்புகளுக்கு திறக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 5 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சமீப காலமாக மாணவ, மாணவியர் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments